சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
7.086   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம்   (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.086   விடையின் மேல் வருவானை; வேதத்தின்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) ; (திருத்தலம் அருள்தரு அமிர்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு பனங்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,
மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர்,
சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!

[1]
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி,
பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்;
பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!

[2]
தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு
எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!

[3]
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக்
குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை
பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே!

[4]
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை,
சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை,
வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே!

[5]
எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்;
வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்;
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே!

[6]
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன்,
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான்,
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்
ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே!

[7]
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை,
பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை,
மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!

[8]
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம்
உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை,
பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற
குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!

[9]
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை,
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல்,
ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list